அங்காரா: சிரியாவின் அல்-பாப் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமம் துருக்கிய ஆதரவுப் போராளிகள் வசம் உள்ளது. அந்த கிராமத்தில் ஐஎஸ் போராளி கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 41 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் 35 பேர் பொதுமக்கள் என்றும் போலிசார் கூறினர். அத்தாக்குதலுக்கு முன்னதாக ஐஎஸ் வசம் இருந்த அல்-பாப் நகரத்தின் மீது துருக்கியப் படை நடத்திய தாக்குதலில் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஐஎஸ் போராளிகள் நேற்று கார் குண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
சிரியா அருகே ஐஎஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி, பலர் காயம்
1 mins read
-

