கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமின் கொலை தொடர்பில் வடகொரியத் தூதர் ஹயோன் வாங் சோங் தேடப்பட்டு வருவதாக மலேசியா தெரிவித் துள்ளது. அந்த விசாரணையில் போலிசாருடன் ஒத்துழைக்க மறுத்தால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்போவதாகவும் சிலாங்கூர் மாநில போலிஸ் படைத் தலைவர் அப்துல் சாமா மாட் கூறினார். அவர் மீது போலிசார் நடவடிக்கை எடுப்பதற்கு முன்ன தாக அவர் தாமகவே புலன் விசாரணைக் குழுவினர் முன் னிலையில் ஆஜராக அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். போலிஸ் விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் ராணுவச் சட்டத்தின் கீழ் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் திரு சாமா செய்தியாளர்களிடம் கூறி னார்.
வடகொரியத் தூதருக்கு மலேசியா கைது ஆணை
1 mins read

