அமெரிக்காவில் இந்தியர் கொலை: விரைவான விசாரணைக்கு இந்தியா கோரிக்கை

அமெரிக்காவில் இந்தியர் கொலை: விரைவான விசாரணைக்கு இந்தியா கோரிக்கை

1 mins read

வா‌ஷிங்டன்: இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்தியா அதன் அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளது. அந்த சம்பவம் இனவெறி தாக்குதல் தொடர்புடையதா என்பது குறித்து அமெரிக்க போலிசார் விசாரணை மேற் கொண்டு வரும் நிலையில் விரைவான விசாரணைக்கு இந்தியா கோரிக்கை விடுத் துள்ளது. இந்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எத்தனையோ பேர் படிப்பதற்காக, வேலைக்காக அல்லது சுற்றுலாப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்