பெற்றோர் பிடி நழுவி இரண்டு பிள்ளைகள் விழுந்து மரணம்

பெற்றோர் பிடி நழுவி இரண்டு பிள்ளைகள் விழுந்து மரணம்

1 mins read
311c1e2e-09a3-4c45-9c3c-d691a0dbbddf
-

சீனாவின் தியான்ஜின் நகரில் இரண்டு வயதுள்ள ஓர் ஆண் குழந்தையும் மூன்று வயதுள்ள பெண் குழந்தையும் பெற்றோ ரின் பிடி தவறியதால் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டனர். அந்தப் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு சென்றது தாயா, தந்தையாஎன்பது தெரியவில்லை. கடைத் தொகுதி யின் திறந்த மொட்டை மாடம் ஒன்றுக்கு அருகே நின்றுகொண்டிருந்த போது திடீரென்று ஒரு குழந்தை பிடி தவறி கீழே விழுந்துவிட்டது.

அதைப் பிடிக்கப்போன நேரத்தில் கையிலிருந்த இரண்டாவது குழந்தையும் நழுவி கீழே விழுந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இரண்டு குழந்தைகளும் தரையில் விழுந்து அதே இடத்தில் மரணம் அடைந்துவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg