டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வுத் துறை நிராகரித்தது

டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வுத் துறை நிராகரித்தது

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்க திரு ஒபாமா உத்தரவிட்டதாக திரு டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுகளை எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி நிராகரித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என நீதித்துறையை திரு கோமி கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறை இன்னும் நிராகரிக்கவில்லை. நாடாளுமன்றக் குழு இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது.