11 மலேசியர்களை வடகொரியா உடனே விடுவிக்கவேண்டும் : நஜிப்

11 மலேசியர்களை வடகொரியா உடனே விடுவிக்கவேண்டும் : நஜிப்

1 mins read

கோலாலம்பூர்: வட கொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து மலேசியா வுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பூசல் நீடிக்கும் வேளை யில் வடகொரியாவில் உள்ள எந்த ஒரு மலேசியரும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அதிரடியாக உத்தரவிட்டார். வடகொரியாவில் தற்போது தூதரக அதிகாரிகள் மூவர் உள்பட 11 மலேசியர்கள் இருப்ப தாக மலேசிய வெளியுறவு துணை அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், வடகொரி யாவில் உள்ள மலேசியர்கள் அனைவரையும் உடனடியாக மலேசியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.