பெய்ஜிங்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் இனக்குழுக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடப்பதால் அங்கிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா அருகே உள்ள முகாம்களில் மியன்மாரைச் சேர்ந்த 20,000க்கும் அதிகமானோர் தங்கியிருப்பதாக சீனா கூறியுள்ளது. சண்டைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளது. எல்லையைக் கடந்து முகாம் களில் தங்கியுள்ளவர்களுக்கு சீனா மனிதாபிமான உதவிகளை செய்து வருவதாக சீனா கூறியுள்ளது.
அடைக்கலம் நாடும் மியன்மார் அகதிகள்
1 mins read

