லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலகுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க பிர தமர் தெரசா மேவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கி யிருக்கிறது. இதனால் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அரசி யார் அனுமதி அளித்த பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும். ஸ்காட்லாந்தின் முதல் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜியன், ஸ்காட் லாந்து சுதந்திரத்துக்கு இரண் டாவது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரி வித்துள்ள வேளையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முடிவு வெளி யாகியிருக்கிறது. 2018ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்கும் இடையே வாக் கெடுப்பை நடத்த ஸ்டர்ஜியான் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுதல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல்
1 mins read

