மலேசியர்களை மீட்பது பற்றி இன்னும் பேசவில்லை

மலேசியர்களை மீட்பது பற்றி இன்னும் பேசவில்லை

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: வடகொரியாவை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் ஒன்பது மலேசியர்களை விடுவிப்பது தொடர்பில் வட கொரியாவுடன் இன்னும் அதிகார பூர்வமாக பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை என மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித் துள்ளார். "சரியான நேரம் வரும்போது வடகொரியாவுடன் அது தொடர்பில் முறையான பேச்சைத் தொடங்குவோம்," என்றும் திரு நஜிப் கூறினார். வடகொரியாவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வடகொரிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்றும் இதனால் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் திரு நஜிப், நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.