மலாக்கா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோன் நாமின் கொலை தொடர்பாக முக்கியமான நபர் ஒருவர் தேடப்படுவதாக மலேசியா வின் போலிஸ் தலைவர் கூறி யுள்ளார். அந்த நபர் வடகொரியராக இருக்கலாம் என்று நேற்று கூறிய காவல்துறை தலைமை அதிகாரி காலிட் அபு பக்கர் அந்த நபரின் பெயரையோ அவர் பற்றிய மற்ற தகவல்களையோ வெளியிட வில்லை. "கோலாலம்பூரில் உள்ள வட கொரிய தூதரகத்தில் ஒளிந்திருப் பதாக நம்பப்படும் மூன்று வட கொரியர்களைத் தவிர மேலும் சிலர் இந்த வழக்கின் தொடர்பில் தேடப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பற்றி கூடுதல் தகவல்கள் அளிக்க இயலாது. ஆனால், அவர்களில் ஒருவர் மிகவும் முக்கியமான நபர்," என்று அவர் கூறினார்.
ஜோங் நாம் கொலையில் மற்றொரு வடகொரியருக்குத் தொடர்பு
1 mins read

