சோல்: வடகொரியா நேற்று பாய்ச்சிய ஏவுகணை வெடித்துச் சிதறியது என்றும் அந்த நாடு மேலும் பல அணுவாயுதங் களைச் சோதனை செய்ய உள்ளது என்றும் அமெரிக்காவும் தென்கொரியாவும் எச்சரித்துள்ளன. இந்த ஏவுகணை வட கொரியாவின் வோன்சான் நகரத்திற்கு அருகில் இருந்து பாய்ச் சப்பட்டது. இந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டு சில விநாடி- களில் வெடித்துச் சிதறியதாக அமெரிக்காவின் பசிபிக் தளபத்தியத்தின் தளபதி டேவ் பென்ஹம் தெரிவித்தார். அந்த ஏவுகணை எவ்வகையான ஏவுகணை என்பது பற்றி அறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவது அந்த வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை வெடித்துச் சிதறியது
1 mins read

