மலேசியர்கள் பத்திரமாக நாடு திரும்புவர்: தென்கொரியா நம்பிக்கை

மலேசியர்கள் பத்திரமாக நாடு திரும்புவர்: தென்கொரியா நம்பிக்கை

1 mins read

கோலாலம்பூர்: வடகொரியாவில் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் தென்- கொரியா தனது அக்கறையை வெளிப்படுத்துவதாக மலேசியா வுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ள தென்கொரியா வின் நாடாளுமன்றப் பேச்சாளர் சுங் சை=குன் தெரிவித்தார். வடகொரியாவில் தவிக்கும் மலேசிய அரச தந்திர அதிகாரிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் பத்திரமாக விரைவில் நாடு திரும்புவர். அந்த நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்று திரு சுங் நம்பிக்கை தெரிவித்தார். ஜோங் நாம் கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய அரசு நியாயமாக நடந்துகொண்டதாக அவர் கூறினார். இதற்கு முன்னதாக திரு சிங், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்தார்.