குவீன்ஸ்லாந்தில் பள்ளிகள் மூடல்

குவீன்ஸ்லாந்தில் பள்ளிகள் மூடல்

1 mins read

சிட்னி: பசிபிக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. புயல் தாக்கியதற்குப் பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தெற்கு குவீன்ஸ்லாந்து பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் இங்குள்ள பிரிஸ்பன் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அடியோடு பாதித்துள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.