சிரியா தாக்குதல் குறித்து ஜி7 அமைச்சர்கள் பேச்சு

சிரியா தாக்குதல் குறித்து ஜி7 அமைச்சர்கள் பேச்சு

1 mins read

ரோம்: சிரியாவில் அந்நாட்டு அரசாங்கப் படை சென்ற வாரம் மக்கள் மீது நடத்திய ரசாயனத் தாக்குதல் பற்றி ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முக்கியமாக விவாதித்தனர். இத்தாலியில் நேற்று தொடங்கிய ஜி7 கூட்டத்தில், சிரியா அதிபர் ஆசாத்திடமிருந்து ரஷ்யா விலகி இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது. அதிபர் ஆசாத்திற்கு ரஷ்யா ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஆசாத்திடமிருந்து விலகி இருக்க ரஷ்யாவை எந்த வகையில் நெருக்கலாம் என்பது குறித்து அமைச்சர்கள் விவாதித் தனர். ரஷ்யாவை நெருக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர்.