நியூசிலாந்தில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்

நியூசிலாந்தில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்

1 mins read

வெல்லிங்டன்: அதிக சக்திவாய்ந்த புயல் காற்று நேற்று நியூசிலாந்தின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்றும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.