வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளை தாக்கிய புயல் காற்றின் வேகம் தணிந்து விட்டபோதிலும் அங்கு சில வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் கூறின. அப்புயலால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் சாலைகள் பழுதடைந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஒரு சில பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நியூசிலாந்தில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
1 mins read

