பிலிப்பீன்ஸ் ரகசிய அறையில் போதைப் புழங்கிகள் அடைப்பு

பிலிப்பீன்ஸ் ரகசிய அறையில் போதைப் புழங்கிகள் அடைப்பு

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் உள்ள ரகசியமான குறுகிய அறையில் போதைப் புழங்கிகள் அடைத்து வைக்கப்பட்டதை அந்நாட்டின் போலிஸ் தலைவர் தற்காத்துப் பேசியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டேயின் கீழ் போதைப் புழங்கிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு நிலவும் வேளையில் இந்த ரகசிய அறை பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது மணிலாவின் சேரிப்பகுதியில் உள்ள ஒரு போலிஸ் நிலையத்துக்கு முன் அறிவிப்பின்றி மனித உரிமை குழுவினர் சென்றபோது அங்குள்ள குறுகிய அறையில் ஆண்களும் பெண்களும் 12 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.