சிட்னி: ஆஸ்திரேலியாவில் எட்டு குழந்தைகளைக் கத்தியால் குத்தி கொன்ற தாய் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறையினர் கூறினர். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சம்பவத்தில் நான்கு மகன்களுடனும் நான்கு மகள்களுடனும் இருந்தபோது ரைனா தாய்டே என்ற அந்த மாதுக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்று கடந்த மாதம் சட்டப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டது. இது, நேற்று பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. நாற்பது வயதான தாய்டே பிரிஸ் பேனில் உள்ள பாதுகாப்பு மிக்க இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு எதிராக வழக்கில்லை
1 mins read

