இணையத் தாக்குதல்: வடகொரிய ஆதரவு குழுக்கள் காரணம்

இணையத் தாக்குதல்: வடகொரிய ஆதரவு குழுக்கள் காரணம்

1 mins read

சியோல்: இணையத் தாக்குதலில் வடகொரியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதில் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனப்படும் வடகொரிய ஆதரவுக் குழுக்களுக்குப் பங்கு இருக்கலாம் என்றும் கூறப்படு கிறது. பொதுமக்களோடு மக்களாக இருக்கும் அவர்கள் நாசவேலை கள் செய்பவர்கள் என்று வெளிப் படையாக தெரியாதவாறு நடந்து கொள்வார்கள். கடந்த 1980க்குப் பிறகு, வடகொரியா 'டிஜிட்டல் சோல் ஜர்ஸ்' எனச் சிலருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இவர்கள் மூலம் இணையத் தாக்குதல், மின்னணுத் தாக்குதல் போன்றவற்றை நடத்த அது திட்டமிட்டது. குறிப்பாக, தென் கொரியா, அமெரிக்காவின் மீது மின்னணுத் தாக்குதல் நடத்த அது இவ்வாறு பயிற்சி அளித்தது. பயிற்சி பெற்ற இவர்கள் தங்களது அண்டை நாடுகளில் மென்பொருள் வல்லுநர்களாக பணியாற்றுவார்கள்.