டிரம்ப்: அரபு நாடுகளிடம் ஒற்றுமை அவசியம்

டிரம்ப்: அரபு நாடுகளிடம் ஒற்றுமை அவசியம்

1 mins read

வா‌ஷிங்டன்: பயங்கரவாத செயல்களுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாகக் கூறி அந்நாட்டுடனான அரசதந்திர உறவை சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், ஐக்கிய அரசு சிற்றரசுகள் உள்ளிட்ட 5 நாடுகள் துண்டித்துக் கொண்டன. கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் தனிமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரபு நாடுகளிடம் ஒற்றுமை தேவை என்று சவூதி அரேபிய மன்னர் சல்மானை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். அதே சமயத்தில் கத்தார் நாட்டுக்கு எதிரான சவூதி அரேபியா தலைமையிலான தடையை திரு டிரம்ப் டுவிட்டர் பதிவில் வரவேற்றுள்ளார்.