நான்கு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கிறது கத்தார்

நான்கு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கிறது கத்தார்

1 mins read

துபாய்: சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நான்கு அரபு நாடுகள் விதித்த தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கத்தார் அந்த அரபு நாடுகள் தங்கள் நாட்டுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. விமானச் சேவை மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் கத்தார் நாட்டைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கும் மாணவர் களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணைபோவதாக அரபு நாடுகள் கூறுகின்றன.