இறால்களுக்கு சாயம்பூசிய வர்த்தகருக்கு அபராதம்

இறால்களுக்கு சாயம்பூசிய வர்த்தகருக்கு அபராதம்

1 mins read

கோத்தகினபாலு: மலேசியாவின் கோத்தகினபாலுவில் காய்ந்துபோன இறால்களை புதியவை போன்று தோற்றமளிப்பதற்காக அவற்றின் மீது சாயங்களைத் தெளித்த மலேசிய வர்த்தகருக்கு ஆக அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

வாடிக்ககையாளர்களை ஏமாற்றும் வகையில் இந்த நடவடிக்கை இருப்பதாகவும் தண்டனை வழங்கிய சாபா நீதிமன்ற நீதிபதி சாடினார். அபராதம் செலுத்தத் தவறினால் வர்த்தகரான 56 வயது அப்துல் நாசர் ஜெய்னுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.