மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபரின் பாதுகாவலர்கள் ஐவர் மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமுற்றனர். வடக்கு கோடபாட்டோ மாநிலத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் துணை ராணுவ பாதுகாவலர் ஒரு வர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்த னர். கலகப்படைக்கும் ராணுவத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேவின் அமைதி நடவடிக் கையைப் பாதிக்கக்கூடும் என்று ஊடகங்கள் கூறின.
பிலிப்பீன்ஸ் அதிபரின் பாதுகாவலர்கள் ஐவர் காயம்
1 mins read

