சுதந்திர நாளை முன்னிட்டு 4 நாட்கள் எழுச்சியூட்டும் சைக்கிள் பயணம்

சுதந்திர நாளை முன்னிட்டு 4 நாட்கள் எழுச்சியூட்டும் சைக்கிள் பயணம்

1 mins read

மலேசியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 சைக்கிளோட்டிகள் 230 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஆகஸ்ட் 31ஆம் தேதி துவங்கவிருக்கும் இப்பயணத்தில் இரண்டு சைக்கிள் குழுவைச் சேர்ந்த 30 முதல் 73 வயதுடைய ஆண்களும் பெண்களும் பங்கேற்கின்றனர். கோலா திரங்கானுவிலிருந்து பாஹாங்கின் குவாந்தான் அருகேயுள்ள பாலோக்கிற்கு அவர்கள் நான்கு நாள் பயணம் மேற்கொள்வர். பொழுதுபோக்காக சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தவும் நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறவும் இந்த சைக்கிள் பயணம் உதவும் என்று ஏற்பாட்டாளர் சான் தெரிவித்தார்.