பங்ளாதே‌ஷில் சதித் திட்டம் தீட்டிய 10 பேருக்கு மரண தண்டனை

பங்ளாதே‌ஷில் சதித் திட்டம் தீட்டிய 10 பேருக்கு மரண தண்டனை

1 mins read

டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை கடந்த 2000 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டின் உச்சநீதி மன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் ஷேக் அவரது சொந்த ஊரில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த போது வெடிகுண்டு வைத்து அவரைக் கொல்ல சிலர் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். பாதுகாப்புப் படையினர் இந்தக் கொலை முயற்சியை முறியடித்து உரிய நேரத்தில் வெடிகுண்டுகளைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இந்தக் கொலை முயற்சி தொடர்பாக 25 பேர் மீது டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.