சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு தடுப்புக் காவல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊழல் காரணமாக சென்ற மார்ச் மாதம் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2012ல் பதவிக்கு வந்த பார்க், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதற்காக வும் சம்சுங் நிறுவனத்திடமி ருந்து லஞ்சம் பெற்று கொள்கை களை அந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமைத்ததற்காகவும் அவரிடமிருந்து பதவி பறிக்கப் பட்டது. அவரது குற்றச்சாட்டு கள் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பதவி பறிக்கப்பட்ட அதிபரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
1 mins read

