சந்தேகப் பேர்வழி வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவன்

சந்தேகப் பேர்வழி வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவன்

1 mins read

கோலாலம்பூர் மலேசியாவில் பீர் திருவிழாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்ட 19 வயது சந்தேகப் பேர்வழி வெடிகுண்டு தயாரிப்பதில் இதே திறன் படைத்த இறந்த மற்றொரு மலேசிய போராளியுடன் போட்டி போடக்கூடியவன் என்று கூறப்படுகிறது. அந்த சந்தேகப் பேர்வழி சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் நடைபெறவிருந்த பீர் திருவிழாவிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக இவன் கைது செய்யப்பட்டிருப்பதாக தி ஸ்டார் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.