நேப்பிடாவ்: மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதி ராக ராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வேளை யில் அந்நாட்டின் ராணுவத் தலை வரைச் சந்திப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் நேற்று மியன்மார் வந்து சேர்ந்தார். அண்டை பங்ளாதேஷ் நாட்டில் காக்ஸ் பசார் வட்டாரத்தில் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களைச் சந்தித்த ஐநா அதிகாரி ஒருவரும் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த பாலியல் பலாத்காரம், கொலை, வன்முறை உள்ளிட்ட வற்றை ராணுவம் கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டு களின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மியன் மார் ராணுவம் அறிவித்தது.
ரோஹிங்யா நெருக்கடி; மியன்மாரில் டில்லர்சன்
1 mins read

