இஸ்தான்புல்: கிழக்கு ஜெருசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகரமாக அங்கீகரிப்பதற்கு உலகின் மற்ற நாடுகளையும் ஊக்கமூட்டும் முயற்சிகளையும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் நேற்று அறைகூவல் விடுத்தார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அவர் பேசினார்.
துருக்கி அதிபர் எர்டோகனுடன் குவைத் அரசர் ஜாபர் அல்-அஹமட் அல்-சாபா, ஜோர்தான் மன்னர் அப்துல்லா, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். படம்: ராய்ட்டர்ஸ்

