குவாந்தான்: கனமழை காரணமாக மலேசியாவின் பாகாங் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டு 50 தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளத்தில் மூழ்கி இதுவரை இருவர் உயிர் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாரான், ஜெரான்டுட், குவாந்தான், ரொம்பின், பெக்கான், லிப்பிஸ் ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குவாந்தான் நகரிலிருந்து சுமார் 7,000 பேர் 28 தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகாங் வெள்ளத்தால் இருவர் மரணம்; 9,000 பேர் வெளியேற்றம்
1 mins read

