சிலாங்கூரில் கனமழை; மேம்பாலத்தில் வெள்ளம்

சிலாங்கூரில் கனமழை; மேம்பாலத்தில் வெள்ளம்

1 mins read
ccb9c4ba-f784-4263-a012-472ac1ff91a0
-

சிலாங்கூரில் கனமழை காரணமாக பெட்டாலிங் ஜெயாவிலிருக்கும் 30 அடி உயர மேம்பாலச் சாலை ஒன்றில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளம் வாகனமோட்டிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. நீர் வடியும் துளைகளை ஏதாவது பொருட்கள் மூடியிருக்க வேண்டும் என்றும் அதுவே மேம்பாலச் சாலை வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கும் என்றும் இந்தப் படத்தை எடுத்து அனுப்பிய வாசகரான திருவாட்டி ஹயாட்டி இஸ்மாயில் கூறினார். இதனால், ஜாலான் யுனிவர்சிட்டி சாலை நெடுகிலும் போக்குவரத்து மெதுவடைந்து காணப்பட்டது. படம்: தி ஸ்டார்