டெஹ்ரான்: ஈரானின் தலைநகர் டெஹ்ரானி லிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று மலைப் பகுதியில் விழுந்து நொறுங் கியதில் அந்த விமானத்தில் சென்ற 66 பேரும் உயிரிழந் திருக்கலாம் என்று அஞ்சப் படும் வேளையில் அது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால் டெஹ்ரான் விமான நிலையத்திற்கு அருகே ஒன்றுகூடியுள்ள விமானப் பயணிகளின் உற வினர்கள் மிகுந்த கவலை யுடன் காத்திருக்கின்றனர்.
அந்த விமானத்தில் சென்றவர்களைப் பற்றிய நல்ல செய்தியை எதிர் பார்த்து அவர்கள் காத்திருப் பதாகவும் சிலர் தங்களின் துயரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுவ தாகவும் தகவல்கள் கூறு கின்றன. அந்த விமானத்தில் சென்ற பயணிகள், விமானிகள், சிப்பந்திகள் உட்பட 66 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது.

