பணிப்பெண் சித்திரவதை; மலேசிய மாது இருக்கும் இடம் தெரிந்தது

பணிப்பெண் சித்திரவதை; மலேசிய மாது இருக்கும் இடம் தெரிந்தது

1 mins read

கோலாலம்பூர்: இந்தோனிசிய பணிப்பெண்ணை சித்திரவதைச் செய்த சம்பவத்தில் மலேசிய மாதுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மறுஆய்வு செய்யும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வராமல் தலைமறைவாகிவிட்ட ரோ‌ஷிடா முகம்மது அலி இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக போலிசார் கூறினர். அவரது வழக்கறிஞர் மூலமாக அவருடன் போலிசார் தொடர்பு கொண்டுள்ளதாக சிலாங்கூர் போலிஸ் படைத் தலைவர் மஸ்லான் மன்சோர் கூறினார்.