டெஹ்ரான்: ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினால் மிகப் பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச் சரித்துள்ளார். அத்துடன் அணுசக்தித் திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டிலிருந்து விலகுவது குறித்து இம்மாதம் 12ஆம் தேதிக்குள் தீர்மானிக்க விருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில் அந்த உடன்பாட்டி லிருந்து விலக வேண்டாம் என்று திரு டிரம்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவுக்கு ஈரானிய அதிபர் எச்சரிக்கை
1 mins read

