கோலாலம்பூர்: முன்னாள் பிர தமர் நஜிப் ரசாக்கின் வீடுகளில் நடந்த சோதனையை நடத்து வதற்கான போலிஸ் திட்டங்கள் பற்றி தமக்குத் தெரியாது என்று நேற்றுப் பிற்பகலில் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்தார். போலிஸ் குழுவினர், கோலா லம்பூரில் இருக்கும் நஜிப் ரசாக் கின் இரண்டு இருப்பிடங்களில் புதன்கிழமை சோதனை நடத் தினர். அந்தச் சோதனை நேற்றும் தொடர்ந்தது. "போலிசார் செயல்படுவதற் கான நடைமுறைகள் இருக்கின் றன. இரவு நேரத்தில்தான் சோதனை நடத்த வேண்டுமா என்பது பற்றி எனக்குத் தெரி யாது. "ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இதுபோல மக்களை நான் கொடுமைப்படுத்தப் போவ தில்லை. மக்களைக் கண்ணிய மாக நடத்தவே நான் விரும்பு கிறேன்," என்று மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.
மகாதீர்: சோதனை பற்றி எனக்குத் தெரியாது
1 mins read

