கோலாலம்பூர்: ஹரிராயா பெருநாளை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் போனஸ் வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹரிராயா பெருநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அத்தொகை வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக 3.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பக்கத்தான் கூட்டணி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் கூறினார்.
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் போனஸ்
1 mins read

