மலேசியாவில் ஜோ லோவின் கடப்பிதழ் ரத்து

மலேசியாவில் ஜோ லோவின் கடப்பிதழ் ரத்து

1 mins read

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் முக்கிய சந்தேகப் பேர்வழியாகக் கருதப்படும் ஜோ லோவின் கடப்பிதழை (பாஸ்போர்ட்) மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவரது கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டது ஜூன் 15ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்திருப்பதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் முஸ்தபர் அலி கூறினார்.