ஜப்பானில் கனமழை: மூவர் மரணம்; பலர் வெளியேற்றம்

ஜப்பானில் கனமழை: மூவர் மரணம்; பலர் வெளியேற்றம்

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறு மற்றும் ஏரிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு மாது உட்பட மூவர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். இன்னும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர். கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 210,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.