மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பட்டாசு கிடங்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளில் தீயணைப்பாளர்கள் நால்வர் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த வெடிப்புகளைத் தொடர்ந்து போலிசாரும் தீயணைப்பாளர்களும் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதாக தகவல்கள் கூறின. டுல்டிபெக் நகரில் அந்த பட்டாசு கிடங்கு உள்ளது. அங்கு ஏற்பட்ட தொடர் வெடிப்புகளையடுத்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்ததாகவும் அருகில் உள்ள சந்தைப் பகுதி சேதம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மெக்சிகோ பட்டாசு கிடங்கில் அடுத்தடுத்து வெடிப்புகள்
1 mins read

