கோலாலம்பூர்: பினாங்கில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்களால் வெளியில் வர முடியவில்லை. அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் அந்த இடங்களுக்குச் சென்று வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றியதாக தீயணைப்புப் படைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK

