நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட மலையேறிகள்

1 mins read
be479e91-4a1a-4eb1-b430-33c893818a83
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது இந்தோனீ சியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேறிகள் சுமார் 500 பேர் ரிஞ்சானி மலை அடிவாரத்தில் சிக்கிக்கொண்டனர். நிலநடுக் கத்தைத் தொடர்ந்து அப்பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த மலையேறிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் பாது காப்பாக வெளியேற்றுவதில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். லொம்போக் சுற்றுலாத் தீவில் நேற்று ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் 162 பேர் காயம் அடைந்ததாகவும் அதி காரிகள் கூறினர். நிலநடுக்கத்தில் பல வீடுகள் நாசமாகின.