ஸ்டாக்ஹோம்: புற்றுநோய் தடுப்பு தொடர்பிலான ஆய் வில் சாதனைகளைப் படைத்த அமெரிக்கர் ஜேம்ஸ் எலி சனுக்கும் ஜப்பானியர் டசுக்கு ஹொஞ்சோவுக்கும் (படம்) மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையின்போது உடலின் நோய்த்தடுப்பு அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு உத்திகளின் பயனை அவர்கள் ஆராய்ந்ததாக பரிசை வழங்கிய சுவீடனின் கரொலின்ஸ்கா நிலையம் தெரிவித்தது. சுவீடனின் நாணயமான 9 மில்லியன் க்ரெளன்ஸ் (1.5 மில்லியன் வெள்ளி) அவர்களுக்கு பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
புற்றுநோய் ஆய்வாளர்கள் இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபெல் பரிசு
1 mins read

