ஜெர்மனியில் அதிவேக ரயிலில் தீ; பயணிகள் தப்பினர்

1 mins read
4877aa60-cc88-4831-9669-8c5bcd717783
-

ஜெர்மனியில் அதிவேக ரயில் தீப்பிடித்து எரிந்தது. ஃபிராங்க்ஃபர்ட்-கோலோன் இடையே ரயில் தீப் பிடித்து எரிந்ததாகவும் இதில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை காலை டியர்டோர்பை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் தீ மூண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 510 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. படம்: இபிஏ