சிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், அந்நாட்டின் பழங்குடிப் பெண் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டதை அடுத்து மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பெண் ஆற்றுத் தண்ணீருக்குள் நின்றுகொண்டே மீன் பிடிக்க முயன்றபோது முதலை ஒன்று திடீரென அவரைக் கவ்வி இழுத்துக்கொண்டு மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த இவரது குடும்ப உறுப்பினர்கள், இவரைக் கண்டுபிடிக்க முயன்றபோது அவர்களது முயற்சி பலனிக்கவில்லை. பின்னர், அவரது உடலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
முதலையால் தாக்கப்பட்ட பெண் பலி
1 mins read

