தைவானில் ரயில் தடம் புரண்டு 17 பேர் பலி; 100 பேர் காயம்

தைவானில் ரயில் தடம் புரண்டு 17 பேர் பலி; 100 பேர் காயம்

1 mins read
748ec9f2-81ca-4b14-9221-7e6af147ce6f
-

தைப்பே: தைவானில் தைப்பேக்கு அருகே உள்ள வடகிழக்கு நகரமான யிலானில் நேற்று ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 17 பேர் இறந்து விட்டனர் என்றும் 100 பேர் காயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 5.00 மணியளவில் டோங் ஷான், சூசின் நிலையங் களுக்கு இடையே புயூமா எக்ஸ்பிரஸ் 6432 எனும் ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடியது. இதில் ஐந்து ரயில் பெட்டிகள் சாய்ந்தன.

தைவானில் ரயில் தடம் புரண்டதில் 100 பேர் காயம் அடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்