பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஜோகூரின் குக்குப் தீவு தொடர்பான விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது. ஜோகூர் விவகாரங்களில் வெளி யாட்கள் தலையிடக்கூடாது என்று ஜோகூர் இளவரசர் இஸ்மாயில் கூறி யிருந்ததற்கு பதில் அளித்து பேசிய மலேசிய உள்துறை அமைச்சர் முஹை தீன் யாசின், தானும் ஒரு ஜோகூர்காரர் என்று கூறியுள்ளார். "நான் வெளியாள் அல்ல, நானும் ஜோகூர்காரன்," என்று நேற்று செய்தி யாளர்களிடம் திரு முஹைதீன் யாசின் சொன்னார். தேசிய பூங்கா, சுல்தான் நிலப் பகுதி என்ற இரு வெவ்வேறு தகுதிக் கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறிய அவர், குக்குப் தீவுக்கு ஏற்கெனவே இருந்த தகுதியை அடைய ஜோகூர் சுல்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். "குக்குப் தீவு ஆகப்பெரிய அழகிய தீவு, அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தக்கூடாது. தேசிய பூங்கா வாகவே அது தொடர்ந்து நீடிக்க அனு மதிக்க வேண்டும்.
குக்குப் தீவு பழைய தேசிய பூங்கா என்ற தகுதியைப் பெற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.