லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கடைசி நேரத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்பை ஒத்திவைத்து தமது 'பிரக்சிட்' திட்டத்தைக் காப்பாற்றுவதற்காக நேற்று பிரஸ்சல்சுக்குப் புறப்பட்டார். அங்கு ஐரோப்பிய தலைவர் களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் வெளியேறும் தமது திட்டத்திற்கு அவர் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது. பிரிட்டனுக்குப் பயன ளிக்கும் வகையில் மேலும் சில சலுகைகளுக்கு அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் களான நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரையும் மே சந்திக்கவிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மே, "நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் வடக்கு ஐயர் லாந்து எல்லைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டியிருக் கிறது," என்று குறிப்பிட்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து வெளியேறும் பிரிட்டன் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டதால் மீண்டும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டோனல்ட் டஸ்க் கூறினார்.
நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டை பிரதமர் மே சந்தித்தார். பிரஸ்சல்சில் ஐரோப்பிய தலைவர்களையும் பிரதமர் மே சந்திக்கிறார். இதற்கிடையே அடுத்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி படம்: த ஸ்டார் இணையம்