பேங்காக்: தாய்லாந்தின் ராணுவ அர சாங்கம், அரசியல் கட்சிகள் தடை யின்றி பிரசாரங்களில் ஈடுபடலாம் என்று அதிரடியாக நேற்று அறிவித் தது. இதனால் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள் ளது. தாய்லாந்து மக்களும் அரசியல் கட்சிகளும் உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பொதுத் தேர் தல் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் முடிவுக்கு வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014ல் யிங்லக் ஷினவத்ரா தலைமை யிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அதன் பிறகு அரசியல் கட்சி பிரசாரங்களுக்கு அது தடை விதித்தது. ஆனால் முறைப்படி தேர்தல் நடை பெறும் என ராணுவ அரசாங்கம் வலி யுறுத்தி வந்தது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் மீதான தடைகள் விலக்கப்படுவதாக நேற்று பிரதமர் பிரயூட் சான்-ஒ-சா அறிவித்தார்.
தாய்லாந்தில் இம்மாதம் 7ஆம் தேதி ஜனநாயக ஆதரவாளர்கள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'எங்களுக்குத் தேவை தேர்தல்', 'தேர்தலை ஒத்திப் போடாதீர்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர். படம்: இபிஏ