மத்திய வியட்னாமில் வெள்ளம்; 13 பேர் பலி

ஹனோய்: மத்திய வியட்னாமில் கனமழையைத் தொடர்ந்து ஏற் பட்ட வெள்ளத்தில் 13 பேர் மாண்டனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று தெரிவித் தனர். இந்நிலையில் இவ்வார இறுதியில் மோசமான பருவ நிலையை எதிர்நோக்க வேண்டி யிருக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித் துள்ளது. இதனால் விவ சாயிகள் விளைச்சல் நிலத் தையும் கால் நடைகளையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி யிருக்கின்றனர். கடந்த சனிக்கிழமையி லிருந்து ஆறு மாகாணங்களில் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான மாடுகளும் கோழிகளும் இறந்து விட்டன. சில இடங்களில் ஐம்பது சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது என்று அதி காரிகள் கூறினர்.

வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யலாம் என் பதால் அரசாங்கம் முன் எச் சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. குவாங் இங்ஙய் மாகாணத் தின் அதிகாரி ஒருவர், 13 பேர் இறந்து விட்டதாகவும் ஒருவரை காணவில்லை என்றும் தெரி வித்தார். ஏறக்குறைய 12,000 ஹெக்டர் விவசாய நிலம் நாசமானது என்றும் 160,000 கால்நடைகள் இறந்துவிட்டன என்றும் அவர் சொன்னார்.2018-12-14 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!