ரோஸ்மா வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

ரோஸ்மா வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மீதான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பை மற்றொரு தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திருமதி ரோஸ்மா, சரவாக் பள்ளிகளில் சூரியத் தகடு பொருத்தும் திட்டம் தொடர்பில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.